Saturday, November 22, 2014

Saneeswarar Pravesam

அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு ஜம்புகாரணேசுவரர் திருக்கோயில், 
திருமுருகன் திருக்கோவில், கூந்தலூர்.

சனிப்பிரவேசம்!  

    










  நிகழும் ஜய வருடம் மார்கழி மாதம் ஒன்றாம் நாளான 16-12-2014 அன்று மதியம் 2.43 மணிக்கு, கூந்தலூர்அருள்மிகு சனீஸ்வர பகவான்,துலாம் ராசியிலிருந்து விருச்சிக இராசிக்கு பிரவேசிக்க இருப்பதை முன்னிட்டு , திருக்கூந்தலூர்முருகன் கோவிலில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஹோமம் மற்றும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடைபெறும்.

கூந்தலூர் முருகன் திருத்தலம் , சர்வ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமாக விளங்கி வருகிறது. அதிசிறப்பாக , திருக்கோவிலின் ஈசான்ய பாகத்தில் அருள்பாலிக்கும் திருமுருகப்பெருமானை வணங்கி நிற்கும் சாந்த ரூபியாக , அருள் தரும் வள்ளல் பெருமானாக சனீஸ்வர பகவான் திகழ்வதால், சர்வ சனீஸ்வர பாதிப்புகள் நீங்கி சனீஸ்வர பகவானின் கருணையை, அன்பை அடையும் மிகச்சிறப்புக்குரிய பரிகாரத்தலமாக அடியார்களால் போற்றப்படுகிறது

மேலும், அங்காரக [ செவ்வாய் ] கிரகத்தின் ஆட்சி வீடான விருச்சிக இராசிக்கு இந்த சனி பகவான் பிரவேசம், செவ்வாய் - சனி பரிவர்த்தனை என்ற ஜாதக ரீதியான அமைப்பில் நிகழ்வதால்,அருணகிரிநாதரால் குமரகுருபரன் என வழங்கப்படும் கூந்தலூர் திருமுருகன் திருவருளால், இயல்பிலே செவ்வாய் - சனி பரிவர்த்தனை நிவாரண ஸ்தலமாகத் திகழும் கூந்தலூர் அருள்மிகு முருகன் திருக்கோவிலுக்கு அன்பர்கள் வந்திருந்து, 

சனிப்பிரவேச சிறப்பு ஹோமத்திலும் , பரிஹார அபிஷேக அர்ச்சனை ஆராதனைகளிலும் பங்கேற்று , அவர்தம் குடும்ப சுபிட்ஷம், தேக ஆரோக்கியம், மன அமைதி , பொருளாதார உயர்வுநிலைபெற நற்பலன் பெற்று , கிரக பாதிப்புகள் நீங்கி நிவாரணமடைந்து நல்வாழ்வு பெற்றிட, 

 எல்லாம் வல்ல கருணைக்கடலாம் அடியார் பிணி நீக்கும் 
அருள்மிகு கூந்தலூர் திருமுருகக்கடவுள் 
தாள்பணிந்து வணங்குகிறோம்!

ஓம் சரவண பவ!


க.ஆசைத்தம்பி  -  தக்கார்/செயல் அலுவலர் -  94435 12146

 தே.திருநாவுக்கரசு -  செயல் அலுவலர் -  95856 67502

அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு ஜம்புகாரணேசுவரர் திருக்கோயில், 
திருமுருகன் திருக்கோவில், கூந்தலூர்.

மொபைல்: 96886 77538 / 94435 24737

Monday, November 3, 2014

Koonthalur





அருள்மிகு  ஆனந்தவல்லி உடனாய  ஜம்புகாரணேசுவரர்  திருக்கோவிலில்     தனி  சன்னதி கொண்டு  அடியார்க்கெல்லாம்  அருள்   பாலித்துவரும்   எம்பெருமான்  கூந்தலூர் முருகனை தரிசித்து , இறையனுபவம் பெற வாரீர்!

நதிக்கரை ஒர சிற்றூரில் மாசுபடாத இயற்கைச்  சூழல், மன அமைதி எல்லாவற்றுக்கும் மேலாக சனீச்வர பகவானின் அருளை நமக்கு கிடைக்கச்செய்யும் எம்பெருமான் கூந்தலூர் முருகனின் அற்புத தரிசனம் ஆத்ம நிறைவுடன் பெற வாரீர்! ஓம் சரவணபவ! 

திருக்கோவில் இணையதளம்:

http://www.koonthalurmurugantemple.org